Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் வெறும் 5 ரன்களில் வெளியேறினார். அவரது மோசமான ஆட்டத்தை பார்த்து விரக்தி அடைந்த ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்துள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 4 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக 9 ரன்கள், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 9 ரன்கள், வங்கதேசத்திற்கு எதிராக 50 ரன்கள் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 51 ரன்கள் எடுத்திருந்தார். அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 ரன்கள் எடுத்தார். 6 இன்னிங்ஸில் மொத்தம் 128 ரன்கள். இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அதற்கு ராகுலின் மோசமான ஆட்டமும் ஒரு காரணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/INzv63A
via IFTTT

No comments