Gadgets All Rounder
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்திய அணியை இங்கிலாந்து அணி தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கிண்டல் செய்து இருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 - 170/0 இடையே மோதல் நடக்கிறது'' என குறிப்பிட்டு இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aEwDke
via IFTTT
Post Comment
No comments