Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது டி20 கிரிக்கெட்டின் சட்டகத்தையே மாற்றப்போகிறது என்று நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது, இனி டி20 கிரிக்கெட்டை மற்ற அணிகளும் இங்கிலாந்தைப் போலவே ஆடும் என்பதே அந்தக் கருத்தின் சாராம்சமாகும்.

2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இங்கிலாந்து அணிக்கு ஒரு மிகப் பெரிய அவமானகரமான தொடராக அமைந்தது. எப்படியெனில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 111 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அடுத்ததாக நியூஸிலாந்தில் வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 33 ஓவர்களில் 123 ரன்களுக்குச் சுருண்டது. பதிலுக்கு நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவ் ஃபின் போன்ற இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை மைதானத்துக்கு வெளியே அடித்து 25 பந்துகளில் 77 ரன்களை 8 பவுண்டரி 7 சிக்சர்களுடன் பறக்க விட்டு ஆட்டத்தை 12.2 ஓவர்களில் முடித்தெறிந்தார். 8 விக்கெட்டுகளில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2T3Kzvr
via IFTTT

No comments