Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆடுவதால் பிற நாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதி இல்லாததால் அவர்கள் டி20 கிரிக்கெட்டின் பல பரிமாண அனுபவங்களில் இருந்தும் திறமை வளர்ப்பில் இருந்தும் தடுக்கப்படுகிறார்கள் என்று நடப்பு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியதை அடுத்து இந்த விவாதம் எழுந்துள்ளது.

உதாரணமாக, உலகம் முழுதும் ஐபிஎல் போல பல்வேறு லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை என டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்துமே தரமான கிரிக்கெட்டைத்தான் ஆடுகின்றன. இந்த லீகுகளில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முழுக்க முழுக்க வணிகக் காரணங்களுக்காக இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை. அப்படியே அவர்கள் ஆட விரும்பினாலும் இந்திய கிரிக்கெட்டிலிருந்து, ஐபிஎல் உட்பட ஓய்வு அறிவித்தால்தான் முடியும். ஓய்வு அறிவித்த பிறகு எந்த டி20 லீக் அணியின் உரிமையாளர்கள் அவர்களை ஒப்பந்தம் செய்வார்கள்?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MZ2LCmD
via IFTTT

No comments