Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

மெல்பேர்ன்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வகையில் ஜோகோவிச், ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்தால் அவருக்கு விசா கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மெல்பேர்னை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தொடர் 2023 ஜனவரி வாக்கில் நடைபெற உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அவர் ஆஸ்திரேலியா சென்ற நிலையில் விசா சிக்கல் காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் ஜோகோவிச் வெளியேறி இருந்தார். அவருக்கு விசா மறுக்கப்பட்டதற்கான பிரதான காரணம் அவர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது தான். அது தொடர்பாக அவர் சட்டப் போராட்டம் நடத்தினார். இருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நாட்டின் தடுப்பூசி கொள்கை அப்படி இருந்தது. அது உலக அளவில் கவனம் பெற்றிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XOJNBpD
via IFTTT

No comments