Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் பெங்களூருவில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து அணி, இன்று 2022 டி20 உலகக் கோப்பையில் மீண்டும் இங்கிலாந்து அணியை மெல்போர்னில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 புள்ளிகளைப் பெற, இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு டக்வொர்த் லூயிஸ் முறையில் 14.3 ஓவர்களில் 110 எடுக்க வேண்டிய இங்கிலாந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

நாம் இங்கிலாந்து அணி பற்றி ரிவ்யூ செய்யும்போதே அதிரடி வீரர்களாக கடைசி வரை வைத்திருக்கும் அணிக்கு உள்ள பேராபத்து என்னவெனில் விக்கெட்டுகள் விழுந்தால் மடமடவென விழுந்து நின்று ஆட ஆளில்லாமல் தோற்கும் என்று கூறியிருந்தோம். இன்று அதுதான் நடந்தது. மழை வரும் என்று கணித்திருப்பதால் ஜாஸ் பட்லர் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு நடந்தது நமக்கும் நடக்கும் என்று யோசிக்கவில்லை. இத்தனை அதிரடி வீரர்களை வைத்துக் கொண்டு முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய வேண்டியதுதானே! ‘அயர்லாந்துதானே முடக்கி விடலாம் பிறகு அடித்து நொறுக்கி விடலாம்’ என்ற நினைப்புத்தான் இங்கிலாந்தின் பிழைப்பைக் கெடுத்து விட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eP5Hkr2
via IFTTT

No comments