Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சூப்பர் 12 போட்டியின் இறுதி நாளான நேற்று (ஞாயிறு) நடைபெற்ற போட்டிகளில் கிடைத்த முடிவுகளை பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இது உள்ளது. ஏனெனில் இரு அணிகளும் தற்போது சூப்பர் 12 ‘குரூப்-2’இல் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதே இதற்கு காரணம்.

இரு அணிகளும் கடைசியாக கடந்த 2007 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தன. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு பிறகு சுமார் 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது அதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UZb5Pc9
via IFTTT

No comments