Gadgets All Rounder

அடிலெய்டில் நடைபெற்ற இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை டி20 போட்டியில் மழை குறுக்கிட, பரபரப்பாக முடிந்த போட்டியில் வங்கதேசம் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாக ஆடி இந்திய அணியை அச்சுறுத்தியது. இறுதியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6 புள்ளிகள் மற்றும் 0.730 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது இந்திய அணி.
இந்தப் போட்டியில் வங்கதேசம், மழைக் குறுக்கீட்டுக்கு முன்னால் லிட்டன் தாஸின் காட்டடி அரைசதத்தின் மூலம் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, வங்கதேசம் 49 எடுத்திருந்தால் போதும். ஆனால் 66 ரன்கள் என்று 17 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மழை வந்தவுடன் இந்திய வீரர்கள், ரசிகர்கள் முகத்தில் ஈயாடவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/P6LBlvn
via IFTTT
No comments