Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து அட்டவணைகால்பந்து திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 20-ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கால்பந்து திருவிழாவில் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. இதில் கலந்துகொண்டுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

டிசம்பர் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறும் இந்த சுற்றில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்ளும். நாக் அவுட் சுற்றில் வெற்றி பெறும் 8 அணிகள் கால் இறுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். கால் இறுதி சுற்று டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 13 மற்றும் 14-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 18-ம் தேதி லுசைல் மைதானத்தில் நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ByeRVPw
via IFTTT

No comments