Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் எதிர்பாராத வகையில் மற்ற அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களில் கிடைத்த முடிவின் காரணமாக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல பாதை அமைத்துக் கொடுத்த நெதர்லாந்துக்கு நன்றி சொல்லி இருந்தார் பாபர் அசாம். ‘போட்டியில் வென்று விடுங்கள். அது போதும் எங்களுக்கு’ என்ற தொனியில் நெதர்லாந்து வீரர் டாம் கூப்பர் அதற்கு பதில் அளித்திருந்தார். அந்த வீடியோ கவனம் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதற்கு பிரதான காரணமே அதிர்ஷ்டம்தான். ஏனெனில் கோப்பையை வெல்லும் என பெருவாரியான ரசிகர்கள் எதிர்பார்த்த தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது. உலகக் கோப்பை, மழை கொடுக்கும் அப்செட், அதிர்ச்சி தோல்வி என்பது ‘மாநாடு’ படத்தில் வரும் டைம் லூப் போல ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடர் கதையாகி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kHdBVjw
via IFTTT

No comments