Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

சிட்னியில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை 27-வது போட்டியில் குரூப் 1 அணிகளான இலங்கையும், நியூஸிலாந்தும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் 15/3 என்ற நிலையில் இறங்கி 61 பந்துகளில் சதம் விளாசி அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டார். பிறகு ஆடிய இலங்கை அணி போராடாமல் சரணடைந்து படுதோல்வி கண்டது.

168 ரன்கள் இலக்கை விரட்ட களமிறங்கிய இலங்கை அணி ட்ரெண்ட் போல்ட், சவுதி, மிட்செல் சாண்ட்னரின் துல்லியத் தாக்குதலில் 19.2 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி கண்டது. இதன் மூலம் நியூஸிலாந்து அணி குரூப் 1 அட்டவணையில் 5 புள்ளிகளுடன் அதிக நெட் ரன் ரேட்டில் அசைக்க முடியாத முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது மிக மிகக் கடினமாகியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g9JbT26
via IFTTT

No comments