Gadgets All Rounder
கிரிக்கெட் உலகில் விராட் கோலியை வேறு எந்தவொரு வீரருடனும் ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக். நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் தனது அபாரமான பேட்டிங் திறன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார் கோலி. அவரது ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அவர்களில் ஒருவராக உள்ளார் மாலிக்.
இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாடி வருபவர் கோலி. மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர். Fab 4 வீரர்களில் ஒருவர். இருந்தாலும் இவருடன் வெவ்வேறு வீரர்களை பலரும் ஒப்பிடப்படுவது வழக்கம். அதில் பிரதானமான வீரராக இருப்பவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8wa5oDK
via IFTTT
No comments