Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

ஹோபார்ட்டில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்று ஆட்டத்தில் குரூப் பி-யில் 'வாழ்வா சாவா' ஆட்டத்தில் அயர்லாந்திடம் தோல்வி கண்டு இருமுறை டி20 உலக சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேறியது. முதலில் மே.இ.தீவுகளை 146 ரன்களுக்கு மட்டுப்படுத்திய அயர்லாந்து, பிறகு காட்டடியாக ஆட்டத்தை தொடங்கியது. 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ‘சூப்பர் 12’ சுற்றுக்குள் சென்றது.

ஒட்டுமொத்த ஆட்டத்தையும் பார்க்கும்போது, குறிப்பாக அயர்லாந்து ஆடிய விதத்தைப் பார்க்கும்போது ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அவர்கள் வெளிப்படுத்திய ஆக்ரோஷம், தன்னம்பிக்கை உடல் மொழி போன்ற தீவிரத்தன்மை மே.இ.தீவுகளிடத்தில் சற்றும் இல்லாமல் போனதுதான் வருந்தத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ErwpkWm
via IFTTT

No comments