Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகளில் சில ஆட்டங்கள், ஆஸ்திரேலியாவில் விடாது பெய்து வரும் மழை காரணமாக வாஷ் அவுட் ஆகியுள்ளன. இந்நிலையில், இதைப் பார்த்து வெகுண்டெழுந்த ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சூப்பர் 12 சுற்றில் மட்டும் மொத்தம் நான்கு போட்டிகள் இதுவரை கைவிடப்பட்டுள்ளன. ஒரு போட்டியின் முடிவு, மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறையில் அறிவிக்கப்பட்டது. இதில் மிக முக்கிய போட்டி என கருதப்பட்ட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அது தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணிகளுக்கு கதவடைப்பு போல உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lKtSnb1
via IFTTT

No comments