Video Of Day

ad inner footer

Deal Price

Gadgets All Rounder

மெல்பர்ன்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மெல்பர்ன் நகரில் இன்று மழை பெய்ய 80 முதல் 90 சதவீத வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) இன்றைய போட்டியின்போது மழைக்கு வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,இன்றைய இந்தியா–பாகிஸ்தான் போட்டியின்போது மழையின் குறுக்கீடு இருக்காது. போட்டியின் 2ஆம் பாதியில் மழை தாக்கம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்று பதிவிட்டுள்ளார். இது தீபாவளியைவிட ஆர்வமாக போட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DbEwN4H
via IFTTT

No comments